Friday, October 12, 2007

அழுகை




விழிகள் வழிந்திட,
காணும் வழிகளை மடை மறைத்திட,
இமைகள் திறந்தும் குவிந்து கிடக்கும் இருள்;
சிரித்து சிரித்து கன்னங்கள் கறுத்ததால்,
விழிகள் துரத்தும் வாசல் நீர்;
விரல்கள் கோலமிட்டால்,
விழிநீர் விடைபெறும்;
விஞ்சிக்கிடக்கும் சோகம்?

Thursday, October 11, 2007

வென்று விடு!




வெற்றி என்பது சிகரமில்லை,
தோல்வி என்பது மரணமில்லை;
எழுந்தவன் எல்லாம் நடப்பதில்லை,
விழுந்தவன் எல்லாம் கிடப்பதில்லை;
விழுந்தவன் எழுந்து தடம் பதிக்க,
இமயம் இறங்கி கை கொடுக்கும்;
வென்றவன் அங்கே செருக்குற்றால்,
விடமென்று அவனை ஒதுக்கி வைக்கும்;
தோல்விகள் வெற்றியின் படிகள் அல்ல,
நம் முயற்சியின் வலிமை சொல்லும் அளவுகோல்;
வெற்றியின் அரியணை ஏற,
தோல்வியை ஆயுதமாக்கு;
ஆயுதங்கள் வென்றிட,
முயற்சிகள் திண்மையாக்கு;
மாவீரன் என போராடு,
அரியணை உனக்கே கொண்டாடு!

Tuesday, October 09, 2007

மௌனம்



இரவில் இதயத்துடிப்புகள் கலைக்கும்;
கனவில்,
காதலியின் கண்ணிமைகள் கலைக்கும்;
காதலரின் சந்திப்பில்,
பேசிப்பேசியே களைக்கும்;
கோபத்தின் கர்ஜனையைக்கூட,
உள்ளே புகுந்து உடைக்கும்;
இது இமைகள் காணாத மொழி,
நல் இதயங்கள் உணரும் மொழி,
இம்மொழி ஒன்றே,
நம்மோடு நாம் பேச வழி!!