Friday, October 24, 2008

சினம் தவிர்

வன்சொல் சினத்தா லுரைத்துபின் அன்பினால்
இன்சொல் பலசொலினும் காயங்கள் நன்றாகா
கூரை மழைத்துளி மண்வீழ்ந்து குழியாகி
பின்நிரைத்தும் திட்டாதல் போல்

Friday, October 17, 2008

ஆத்திகத்தின் உவமேயம்

ஜனனமர ணங்காலஞ் செய்த மரபு
மனனநி கழ்விதைத்த லைவிதி யானதும்
முற்பிறவிப் பாவமான தும்ஆகக் கோர்தலும்
ஆத்திகத்தின் கற்பனைக் கூற்று!

Thursday, October 16, 2008

ஈழமுழக்கம்

விடுதலை முழக்கமிட காணிநிலம் வேண்டுமென,
எங்களின் புனிதப் பயணம் இது!

துப்பாகியின் தோட்டாக்கள் - எங்கள்
தூதுவப் போராளிகள்;
குண்டு உமிழும் பீரங்கிகள் - எங்கள்
தெருக்களின் ஏர் கலப்பைகள்;

நெற்பயிர்களுக்கு பதில் உயிர்ப்பயிர்களை
விதைத்து வருகிறோம்...
சுதந்திரப்பூ என நிச்சயம் விளையும்
ஒரு நாள் அவை!

வீதிகளில் மண் தோண்டி விளையாடும்
மழலையரின் நகக்கண்களில் சதைத்துணுக்கும்,

தீண்டத்தகாதவராய் சித்தரிக்கப்படும்
தியாகப்போராளிகளின் திரைமறை வாழ்வும்,

அடிமை இருள் படிந்த எங்கள் குலமும்,
நிச்சயம் மாறும் ஒரு விடியலில்...

அன்றைய ஆதவன் விடுதலை ஒளியை
பரவ விடுவான் எங்கள் வழிகளில்!!!

Monday, October 13, 2008

சிலேடை III - சிசுவும், மழையும்

புவிவிழக் காலக் கெடுவ தனொடு
அளவளாவிக் கொள்ளும் மகிழ்வும் இணைந்து
வினவா நொடிதருஞ்சி ணுங்கல் இடரும்
பெருஞ்சிறந்த வாழ்வின் வரம்...