இதயங்கள் ஒன்றாகும்,
இமைகள் இரண்டாகும்;
கனவுகள் உண்டாகும்,
கவிதைகள் என்றாகும்;
பார்த்து சலித்த தோற்றத்திலே,
பார்வையின் விதம் வேறாகும்;
பாதங்கள் நடக்கும் பலதூரம்,
வலியின்றி கடக்கும் மறு ஓரம்;
எண்ணங்கள் எல்லாம் இடம் மாறும்,
கவனங்கள் மட்டும் தடுமாறும்;
வெறுத்தவை கூட அழகாகும்,
இனித்தவை இன்னும் அழகாகும்;
இத்தனையும் நிரம்பி வழியும்
உலகமயமாக்கலின் முதற்புள்ளியான
என் ஒருதலைக் காதலில்...