Tuesday, August 28, 2007

கல்லூரி வாழ்க்கை

வண்ணத்துப்பூச்சியின் உடை வாங்கி,

வானகத்து மின்னலாய் தலைகோதி,

விரல்களுள் அடங்கும் புத்தகம் சுமந்து,

கண்களில் ஏக்கம் தெறிக்க,

பூமியின் சொர்க்கத்தில் பாதம் நட்டோம் ,
பிரிவென்பதோர் புயல் வந்து நம்மைசாய்க்கப்போகும் செய்தி அறியாமல் !

மாமன் மச்சான் என்றுமரபுகள் இன்றி உறவுகள் வளர்த்தோம்...

கவலைகளுக்கான மருந்தையும்,இன்பமென்னும் விருந்தையும்,
ஒன்றாய் கொண்டு வலம் வந்தோம் ;

வகுப்பறையின் சுவர்களுக்கெல்லாம்புத்தகம் காணாத பாடங்கள் கற்பித்தோம் !

ஆசிரியர்களுக்கு தூக்கத்தின் செய்முறை காண்பித்தோம் .....

கன்னிகளை கவர்வதற்காககண்களில் காதலுடன் வலம் வந்தோம் !!

ஒட்டிப்பிறந்த பாண்டவர்போல விட்டுப்பிரியாமல்,
நண்பர்களுடனே சுற்றித்திரிந்தோம் ....

அவ்வப்போது வந்த ஊடல் எல்லாம்,
சின்ன விருந்துகளால் மறந்து போனோம்;

உலகமே நம்மை பார்க்க வேண்டுமென்று,
முடியாத இளமைச்சேட்டைகள் முயற்சித்தோம் ...

மரணத்திற்கான தேதி குறிக்கப்பட்டமானுடராய் மாறினோம்,
நாம் பிரிவதற்கான நாளை அறிவித்தபோது !

அந்த நாளில் எதிர் கொண்ட நிமிடங்ளில்,

தழுவல்கள் எத்தனை ?
உறுதிகள் எத்தனை ?
சத்தியங்கள் எத்தனை ?
மன்னிப்புகள் எத்தனை ?
காதல்கள் எத்தனை ?

காலத்தின் நீரில் எல்லாமே கரைந்து விட்டாலும்,

மனமென்னும் பாறையில் அதன் சின்னஞ்சிறுபாசிகளேனும் படிந்திருப்பதை,நம்மால் இன்னும் உணர முடிகிறதே ! ? !


கல்லூரி என்றுமே கனவுகளின் கூடாரம்தான் !!!!!

10 comments:

ammu said...

Really its very nice..

ஜகன் said...

Thank you buddy!

Anonymous said...

yei jegadheesh its really nice...

Simply great ........each and Every line is true

ஜகன் said...

Happy to have such comment..... I feel encouraged....

arif said...

superrr!!!!!!!!!!

arif said...

super!!!!!!!1

ஜகன் said...

Ghilli & Arif,

Many Thanks!!!!!!!!

Suresh Kumar Selvaraj said...

Good use of words..........keep it up...

ஜகன் said...

உங்கள் கருத்துக்கு நன்றி! நிச்சயம் முயற்சிக்கிறேன்...

Anonymous said...

thala very nice... Keep it up..