வண்ணத்துப்பூச்சியின் உடை வாங்கி,
வானகத்து மின்னலாய் தலைகோதி,
விரல்களுள் அடங்கும் புத்தகம் சுமந்து,
கண்களில் ஏக்கம் தெறிக்க,
பூமியின் சொர்க்கத்தில் பாதம் நட்டோம் ,
பிரிவென்பதோர் புயல் வந்து நம்மைசாய்க்கப்போகும் செய்தி அறியாமல் !
மாமன் மச்சான் என்றுமரபுகள் இன்றி உறவுகள் வளர்த்தோம்...
கவலைகளுக்கான மருந்தையும்,இன்பமென்னும் விருந்தையும்,
ஒன்றாய் கொண்டு வலம் வந்தோம் ;
வகுப்பறையின் சுவர்களுக்கெல்லாம்புத்தகம் காணாத பாடங்கள் கற்பித்தோம் !
ஆசிரியர்களுக்கு தூக்கத்தின் செய்முறை காண்பித்தோம் .....
கன்னிகளை கவர்வதற்காககண்களில் காதலுடன் வலம் வந்தோம் !!
ஒட்டிப்பிறந்த பாண்டவர்போல விட்டுப்பிரியாமல்,
நண்பர்களுடனே சுற்றித்திரிந்தோம் ....
அவ்வப்போது வந்த ஊடல் எல்லாம்,
சின்ன விருந்துகளால் மறந்து போனோம்;
உலகமே நம்மை பார்க்க வேண்டுமென்று,
முடியாத இளமைச்சேட்டைகள் முயற்சித்தோம் ...
மரணத்திற்கான தேதி குறிக்கப்பட்டமானுடராய் மாறினோம்,
நாம் பிரிவதற்கான நாளை அறிவித்தபோது !
அந்த நாளில் எதிர் கொண்ட நிமிடங்ளில்,
தழுவல்கள் எத்தனை ?
உறுதிகள் எத்தனை ?
சத்தியங்கள் எத்தனை ?
மன்னிப்புகள் எத்தனை ?
காதல்கள் எத்தனை ?
காலத்தின் நீரில் எல்லாமே கரைந்து விட்டாலும்,
மனமென்னும் பாறையில் அதன் சின்னஞ்சிறுபாசிகளேனும் படிந்திருப்பதை,நம்மால் இன்னும் உணர முடிகிறதே ! ? !
கல்லூரி என்றுமே கனவுகளின் கூடாரம்தான் !!!!!
10 comments:
Really its very nice..
Thank you buddy!
yei jegadheesh its really nice...
Simply great ........each and Every line is true
Happy to have such comment..... I feel encouraged....
superrr!!!!!!!!!!
super!!!!!!!1
Ghilli & Arif,
Many Thanks!!!!!!!!
Good use of words..........keep it up...
உங்கள் கருத்துக்கு நன்றி! நிச்சயம் முயற்சிக்கிறேன்...
thala very nice... Keep it up..
Post a Comment