கவிதைச்சாரல்...
என் முதல் இணைய பதிவு !
Saturday, September 27, 2008
சிலேடை II - மானும் கண்ணும்
புள்ளிகளாய் உற்றிருக்கும் யாக்கை யினில்பின்
நொடிக்கோ ரிடமாய்ப் பறந்திடும்வே கந்தனில்
கேடயமாய் மேலில் வளர்மென் சிறுநீளக்
காம்புகள் காக்கும் இடர்.
Wednesday, September 24, 2008
சிலேடை I - "உழவனும் ஒவியனும்"
காளை விரலிடுக்கில் ஏர்த்தூரி கைபூட்டி
கீழ்நுனிக லப்பைச் சிறகாகி தாளடியில்
செம்மை வருடிடுங் கோடுகள் யாவும்
பசிதீர் படைப்புகள் தான்!
பி.கு:
எனது இந்த கவிதை அதிகாலை எனும் தமிழ் வலைத்தளத்தில்
மார்ச்-11-2009 அன்று பிரசுரமாகி உள்ளது...
முகவரி ->
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=11224&Itemid=147
Sunday, September 21, 2008
துயரங்கள் தூரமாகட்டும்
துன்பம் கண்டு துவள்வெதெல்லாம்
வீணர்கள் இயலாமை!
இருள் வருவது எல்லாம் இமைகள் மூடித்தான்;
உலகம் என்றும் திறந்தே இருக்கிறது...
உணர்ந்து நீயும் அதனில் இன்புற,
கண்கள் திறந்திடு,
கவலை துறந்திடு,
துன்பம் மறந்திடு,
வழிகள் தேர்ந்தெடு,
முயற்சியின் அம்பு தொடு,
வெற்றியின் இலக்கு தொடு,
துயரத்தின் இருளில்
மகிழ்ச்சி வெள்ளம் பரவ விடு;
வாழ்வின் காலம் முற்றும் மட்டும்,
துயரம் என்பது மட்டும் மட்டும்,
தொடாத தூரம் எட்டும் எட்டும்...
மரணம்
நேற்றைய நாட்குறிப்பில்
எழுதாத திட்டம்!
இனி நம் பக்கங்களில்
ஏறாத நிகழ்வு!!
Wednesday, September 17, 2008
உன்னுடன் ஒரு மாலையில்...
வீதியில் நடந்த நமக்கு முன்னால்,
மழலையோடு வந்த தாயைப்பார்த்து
உன்னோடு நான் வருவதாக
உவமைப்படுத்தினாய்...
மிகை என்று மனதில் சிரித்துக்கொண்டேன்;
வழிச்சிறுவர்களோடு கலந்து,
விதிமுறை தெரியாது விளையாடி,
தோல்வி மறைக்க என்னை நடுவராக்கி,
உனக்கே வெற்றி என வாதிட
கெ(கொ)ஞ்சினாயே...
அப்போது தான் உணர்ந்தேன்,
உவமை உண்மை என்று !!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)