Friday, May 15, 2009

தன்னம்பிக்கை

முயல விழையா மனமும்
முடங்கி நிற்கும் உடலும்
முன்முதல் எதிரிகள்...

தோல்வி ஏற்கும் குணமும்
மீண்டும் முயலும் பலமும்
தலையென்றிருக்கும் தோழைமை...

நல்வன செழித்தும் தீயன அழித்தும்
உலகினை செலுத்தும் பேராண்மையாய்,

எதிரியை விட சூளும்
தோழர்க்கு தோளுமென
இயைந்து நடந்தால்
ஈதல்குணம் மறுக்காது வெற்றிகள்...!

புன்னகை

மழலை செய்தால் தெய்வீகம்,
எதிரி என்றால் தோழைமை,
அன்னையாகிப் போனால் பேரன்பு,
நண்பர் அன்பின் வெளிப்பாடு,
மாற்றார் புரிந்தால் புதுஉறவு,
உலக அமைதியின் பரிமாணம்;

ஆகமொத்தம்,
முகங்கொள் இச்சிறுபிறை -

அழகின் அடைக்கலம்,
மனிதரின் மகிழ்தளம்,
மறைமாலை ஆதவன்,
நிறமில்லா வானவில்...

Friday, April 17, 2009

இன்னா ஒழுக்கம்...

உயிராய் புவியிட்ட அன்னையை வைதலும்
நம்பினோர் நெஞ்சினில் நஞ்செடுத்தி ரைத்தலும்
முன்னுரை நல்லுரையும் பின்னுரை தீதுரையும்
வாழ்வினில் இன்கொல் நெறி...

Wednesday, February 04, 2009

உறக்கம்

ஈரிமையி டையடை காரிருளோ தீர்ந்த
தொருநா ளெனநா மிடும்முற்றோ சொப்பனத்தின்
சாரதியோ மீண்டுங் கருவறை சேர
தவணைமு றைமுயற்சி யோ