Friday, May 15, 2009

புன்னகை

மழலை செய்தால் தெய்வீகம்,
எதிரி என்றால் தோழைமை,
அன்னையாகிப் போனால் பேரன்பு,
நண்பர் அன்பின் வெளிப்பாடு,
மாற்றார் புரிந்தால் புதுஉறவு,
உலக அமைதியின் பரிமாணம்;

ஆகமொத்தம்,
முகங்கொள் இச்சிறுபிறை -

அழகின் அடைக்கலம்,
மனிதரின் மகிழ்தளம்,
மறைமாலை ஆதவன்,
நிறமில்லா வானவில்...

2 comments:

Anonymous said...

புன்னகைக்கு ஓர் புது விளக்கம்....

நன்று நண்பா

ஜகன் said...

@ Anonymous,

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...