Friday, May 15, 2009

தன்னம்பிக்கை

முயல விழையா மனமும்
முடங்கி நிற்கும் உடலும்
முன்முதல் எதிரிகள்...

தோல்வி ஏற்கும் குணமும்
மீண்டும் முயலும் பலமும்
தலையென்றிருக்கும் தோழைமை...

நல்வன செழித்தும் தீயன அழித்தும்
உலகினை செலுத்தும் பேராண்மையாய்,

எதிரியை விட சூளும்
தோழர்க்கு தோளுமென
இயைந்து நடந்தால்
ஈதல்குணம் மறுக்காது வெற்றிகள்...!

புன்னகை

மழலை செய்தால் தெய்வீகம்,
எதிரி என்றால் தோழைமை,
அன்னையாகிப் போனால் பேரன்பு,
நண்பர் அன்பின் வெளிப்பாடு,
மாற்றார் புரிந்தால் புதுஉறவு,
உலக அமைதியின் பரிமாணம்;

ஆகமொத்தம்,
முகங்கொள் இச்சிறுபிறை -

அழகின் அடைக்கலம்,
மனிதரின் மகிழ்தளம்,
மறைமாலை ஆதவன்,
நிறமில்லா வானவில்...