Monday, October 04, 2010

துக்கம்

நிகழ்வு உபாதைகள்
நினைவுகள் ஊடேறி,
நீக்கமற நிறையும்;

அகன்றதொரு தகட்டை
குரல் பாதையில் வைத்து
ஒலிக்காற்றை ஒடுக்கும்;

சிரமேறி,
பின்னங்கண்களை எட்டி மிதித்து,
பிளவுகள் வழி
நீர்நூல் பற்றி புறமிறங்கும்;

வாழ்வதனில், யாவரும் வேண்டாவொரு
இலவச வரம்...

No comments: