வீதியில் நடந்த நமக்கு முன்னால்,
மழலையோடு வந்த தாயைப்பார்த்து
உன்னோடு நான் வருவதாக
உவமைப்படுத்தினாய்...
மிகை என்று மனதில் சிரித்துக்கொண்டேன்;
வழிச்சிறுவர்களோடு கலந்து,
விதிமுறை தெரியாது விளையாடி,
தோல்வி மறைக்க என்னை நடுவராக்கி,
உனக்கே வெற்றி என வாதிட
கெ(கொ)ஞ்சினாயே...
அப்போது தான் உணர்ந்தேன்,
உவமை உண்மை என்று !!!
4 comments:
சாதாரணமான நிகழ்சியை மிகவும் அழகாக சித்தரித்துள்ளீர். Great thinking..
@ Rejeesh,
அது தானே என் பகுதி நேர வேலை...
எனினும் மிக்க நன்றி!
nice one...
நன்றி !!! :)
Post a Comment